JESUS LIVES VIDEO MINISTRY
ON
WWW.YOUTUBE.COM
உங்கள் விருப்பமான செனலை தெரிவு செய்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
(Click Here)
மனம் திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது
கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
இந்த உலகில் தேவன் மனிதர்களை ஏன் படைத்தார்? அவர் உருவாக்கிய அனைத்தையும் மனிதர்கள் சந்தோசமாக ஆள வேண்டும் என படைத்தார் என்று வேதாகமத்தில் நமது தேவன் கூறுகிறார். பாவம் என்றால் என்ன என்று அறியாமல் மனிதன் உருவாக்கப்பட்டான். ஆனால், ஆதியில் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தேவனின் கட்டளையை மீறி பாவம் செய்தனர். அதன் பின் மனிதன் பாவத்தில் வாழத் தொடங்கினான். சாத்தான் தனது இச்சைக்குள் கட்டுப்படுத்தினான். இன்றைய உலகம் மாயை! மாயை! எல்லாம் மாயை என பிரசங்கி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நாம் மிக மிக பாவத்தின் இச்சைக்கு கட்டுப்பட்டு தேவனை வேதனையடைய செய்கிறோம். பாவிகளை இரட்சித்து மீட்டெடுக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகிற்கு வந்து எமக்காக உயிர் நீத்தார்.. பின் எமக்காக உயிர்த்தெழுந்தார். அவரின் அளவுகடந்த அன்பை இதன் மூலம் அவர் இப்படி வெளிப்படுத்துகிறார். ஆகவே ஏன் இந்த வாழ்க்கையில் போட்டி, பொறாமை, பண ஆசை, எல்லாம் பொய்யானது, இயேசுவின் அன்பு ஒன்றே உண்மை. நாம் பாவம் செய்துவிட்டோம். இயேசு எங்களை மன்னிக்கமாட்டார் என்று நாம் பின் போகக்கூடாது. அவர் பாவிகளை இரட்சிக்கவே இந்த உலகிற்கு வந்தார். ஆகவே வேதத்தில் ஊழியக்கார பவுலைப் பாருங்கள் கிறிஸ்தவர்களை அழிக்க முன்னின்று செயற்பட்டவர். அவரை தேவன் தனது ஊழியத்துக்கு அழைத்து எவ்வளவு பெரிய அற்புதம் செய்கிறார். ஆகவே நாம் உலக மாயை எல்லாம் விட்டு மனந்திரும்புதல் வேண்டும். அவரிடம் வாருங்கள்! அவர் முன்னால் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்! அவர் எல்லாவற்றையும் மன்னித்து உங்களை மீட்டெடுப்பார்! உங்கள் துக்கம் எல்லாம் சந்தோசமாக மாறும். நானும் பாவியாக வாழ்ந்தவன் இப்போது அவருக்காக என்னையே அர்ப்பணித்துள்ளேன். எப்படி என் அன்பு நேசர் இயேசு கிறிஸ்துவின் அன்பினால் என்னை அரவணைத்து அழைத்துள்ளார். ஆகவே மனம் திரும்புங்கள்.... அப்போது பரலோகராஜ்யம் உங்களுக்காக திறந்திருக்கும்.
சகோதரன். ஏசாயா